ஒரு நாள் திடீரென "ஹேய்.. உனக்கு ஜோசியம் பார்க்க தெரியுமா?" என்றாய். "ஏன்?" என்று கேட்டேன். "உன் கையை காமி" என்றாய். அன்பான மனைவி, இரு குழந்தைகள், வசதியான வாழ்க்கை என்று ஜோசியம் சொல்ல ஆரம்பித்தாய். "நான் பார்க்கட்டுமா?" என்றேன். "உம்ம்" என்றவளாய் உன் கை நீட்டினாய். "ஹையே என்ன கை நீட்டுற.. நாங்க இதழ் ரேகை மட்டும் தான் பார்ப்போம்" என்றேன். உன் வெட்க சிரிப்பில் கூடவா தெரியவில்லை.. என் வாழ்க்கையை சொல்ல வேண்டிய கை எனதல்ல உனது என்று..
நீ தினமும் கோவிலுக்கு வரும் நேரம், நான் காத்திருப்பேன் என தெரியும். அருகில் வந்ததுமே, உன் தோழிகளின் கிண்டல் சிரிப்புகள் என் காதிலும் விழும். "டேய்.. ரொம்ப கிண்டல் செய்றாங்கடா.." என்று தனியாக இருக்கும் பொழுது செல்லமாய் கோபிப்பாய் நீ.
உனக்கு சொல்லியதில்லை. "இருபது வருடங்களாய் தானாக வராதவனை இப்பொழுது தானே வரவழைத்தேன் பார்த்தாயா" என என் மனதில் நக்கல் செய்யும் கடவுள்களை..
"சரி.. அப்படினா நாளைக்கு வரலை" என்பேன் நான். சட்டென்று வரும் பதிலை நிறுத்தி கொண்டு, சரி என்பாய். மறுநாள் நான் மறைந்திருந்து உன் விழித்தேடலை ரசிக்க ஆரம்பிப்பேன். "இந்த முறை நிஜமாவே வரலை போல" என உன் விழியில் ஏமாற்றம் பிறக்கும். அதற்கு மேலும் மறைந்து நிற்க முடியாதவனாய் என்னை காட்டி கொள்வேன்.
பின் சந்திக்கும் பொழுது, உன் உதடுகளில் பொய் கோபத்துடன், "வரமாட்டேன்னு சொல்லிட்டு ஏன் வந்தாய்?" என்பாய். "சரி அப்ப நாளைக்கு நிஜமாவே வரலை" என்றதும் வேகமாக "ச்சும்... பரவாயில்லை வந்துக்கோ" என்பாய். சொல்லாமல் ஜெயித்து விட்டதாய் உன் விழியில் தோன்றும் அந்த மகிழ்ச்சிக்கு ஆயிரம் முறை உன்னிடம் தோற்கவும் தயாராயிருக்கின்றேன் நான் என அறிவாயா?
நீ தினமும் கோவிலுக்கு வரும் நேரம், நான் காத்திருப்பேன் என தெரியும். அருகில் வந்ததுமே, உன் தோழிகளின் கிண்டல் சிரிப்புகள் என் காதிலும் விழும். "டேய்.. ரொம்ப கிண்டல் செய்றாங்கடா.." என்று தனியாக இருக்கும் பொழுது செல்லமாய் கோபிப்பாய் நீ.
உனக்கு சொல்லியதில்லை. "இருபது வருடங்களாய் தானாக வராதவனை இப்பொழுது தானே வரவழைத்தேன் பார்த்தாயா" என என் மனதில் நக்கல் செய்யும் கடவுள்களை..
"சரி.. அப்படினா நாளைக்கு வரலை" என்பேன் நான். சட்டென்று வரும் பதிலை நிறுத்தி கொண்டு, சரி என்பாய். மறுநாள் நான் மறைந்திருந்து உன் விழித்தேடலை ரசிக்க ஆரம்பிப்பேன். "இந்த முறை நிஜமாவே வரலை போல" என உன் விழியில் ஏமாற்றம் பிறக்கும். அதற்கு மேலும் மறைந்து நிற்க முடியாதவனாய் என்னை காட்டி கொள்வேன்.
பின் சந்திக்கும் பொழுது, உன் உதடுகளில் பொய் கோபத்துடன், "வரமாட்டேன்னு சொல்லிட்டு ஏன் வந்தாய்?" என்பாய். "சரி அப்ப நாளைக்கு நிஜமாவே வரலை" என்றதும் வேகமாக "ச்சும்... பரவாயில்லை வந்துக்கோ" என்பாய். சொல்லாமல் ஜெயித்து விட்டதாய் உன் விழியில் தோன்றும் அந்த மகிழ்ச்சிக்கு ஆயிரம் முறை உன்னிடம் தோற்கவும் தயாராயிருக்கின்றேன் நான் என அறிவாயா?
நீ வரும் வரை
விட்டு விட்டு
எரிந்து இருக்கும்
தெரு விளக்கும்
நீ கடந்து
செல்கையில்
குட்டிச் சூரியனாய்..
நீ போடும் கோலம்
காண உதிக்கும்
அதிகாலை சூரியனும்
பகலெல்லாம்
உன்னை கண்ட
மயக்கத்தில்
மாலை பொழுதும்..
ஒரு முறையேனும்
உன்னை விட
அழகாய் இருப்போமென
மெல்ல மெல்ல வரும்
பௌர்ணமி முழுநிலவும்..
தோல்வி வெட்கத்தில்
தேய்பிறையும்..
உன் இமைச்சாமரம்
வீசும் தென்றலுக்கு தான்
உன் விழிச்சிறையில்
வந்து சிக்கியவன் நான்..
நீ கொடுத்து போகும்
ஆயிரம் கனவுகளும்
பறித்து போகும்
இரவு தூக்கங்களும்..
வரமும் அளித்து
சாபமும் தரும்
வேதங்களில்
இது காதல் தான்..